Flash News

    Loading......

பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சர் அறிவிப்பு

 கடந்த 10 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம்  செய்யப்படுவார்கள் என மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துளளார். பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாள்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்க மாதம் ரூ 10000 ஊதியமாக வழங்கக்பபடுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தெரிவிதததாவது

இந்த  அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுக்குப் பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பெறும் எனவும் தெரிவித்துளளார்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

sekar இவ்வாறு கூறியுள்ளார்…
மகிழ்ச்சி, கல்வி அமைச்சருக்கு நன்றி. பகுதி நேர ஆசிரியர்களை போல தமிழகம் முழுவதும் 171 மேல்நிலைத் தொழிற்கல்வி ஆசிரியர்கள் 2000 முதல் சுமார் 21 வருடங்களாக தற்காலிக ஆசிரியர்களாக வாரத்தின் அனைத்து நாட்களும் பணிபுரிந்து, மாதம் இரண்டாயிரம் (ரூ.2000/-) மட்டுமே மாத ஊதியமாக பெற்று கடந்த 2010 மற்றும் 2020ம் ஆண்டுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இருமுறை நடந்தும் பணி நிரந்தரம் ஆகாமல் பணிபுரிந்து வருகிறோம். மாண்புமிகு. கல்வி அமைச்சர் அய்யா அவர்கள் எங்களையும் கருணை உள்ளம் கொண்டு விரைவில் பணி நிரந்தரம் செய்து 171 குடும்பங்களை வாழ வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அபுதாகிர், பண்ருட்டி, கடலூர் இவ்வாறு கூறியுள்ளார்…
171 தொழிற்கல்வி பகுதி நேர ஆசிரியர்கள்,முழு கல்வித்தகுதியுடன்,2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு,பணி நிரந்தரம் செய்யாமல் நடுத்தெருவில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.2019 ஆம் ஆண்டும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ஆணை வழங்க தகுதியாக அவர்களின் கோப்பு தயாராக உள்ள நிலையில்,அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்து மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும் பணி நிரந்தரம் செய்து அவர்கள் வாழ்வில் விளக்கு ஏற்ற வேண்டுகிறோம்.
குறிப்பு:பகுதி நேர ஆசிரியர்கள் வாரம் 3 நாட்கள் மட்டும் சென்றுவிட்டு,மாதம் 10,000 ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள்.ஆனால் மேல்நிலை தொழிற்கல்வி 171 ஆசிரியர்களும் வாரத்தின் அனைத்து நாட்களும் வருகை புரிந்து,மாதம் அதிக பட்சமாக 2,500 மற்றும் அதற்கும் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.