Flash News

9/recent/ticker-posts

உணவே மருந்து

இது பல ஊடகங்களில் வந்த தொகுப்பாகும். இதனை நடைமுறையில் பயன்படுத்ததுவதனால் ஏற்படும் நேர்மறையற்ற தாக்கங்களுக்கு நாங்கள் ொறுப்பல்ல

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

1.       இளஞ்சூடான நீர்

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

2.       வெந்தயம் நீர்

 வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

3.       தேன்

 இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

4.       காய்கறிகள்

 கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

5.       அரிசிக்கஞ்சி

 குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

6.       பழங்கள்

வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

7.       முளைக்கட்டிய பயறு

முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

8.       உளுந்தங்களி

பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவது எப்படி?

எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று பார்க்கப் போகிறோம். பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும்.

வழி – 1

பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.

வழி – 2

மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

வழி-3

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

வழி – 4

வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

வழி – 5

ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.

வழி – 6

வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.
வழி – 7

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்துவிடுங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்
உயிர்ச்சத்து உள்ள வைட்டமின்.‘©யினால் உண்டாகும் நன்மைகள்.
உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள்தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்கு அவசியத் தேவையாகும். வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் சரிவிகிதத்தில் உடலில் சேர்ந்தால்தான் உடல் நோய் நொடிகளின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இவை உடலுக்கு உணவின் மூலமே கிடைக்கிறது. இந்த வைட்டமின் சி உடலில் சேமித்து வைக்கப் படுவதில்லை. தேவைக்கு அதிகமானால் அவை சிறுநீரின் வழியாக வெளியேறிவிடும். இதனால் இந்த உயிர்ச்சத்து தினமும் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த தேவை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. வைட்டமின் ‘சி’ சத்தானது உடலில் குறைந்தால் ஸ்கர்வி (Scurvy) என்ற நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் ‘C’ யும் உடல் வளர்ச்சியும் :
இந்த வைட்டமின் ‘C’ உடலின் எந்தப் பகுதி செல்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றை சீர் செய்து உடலை நன்கு செயல்படவைக்கிறது. செல்களின் வளர்ச்சியே உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.
இந்த வைட்டமின் ‘C’ இரத்தத்தை சுத்தப்படுத்தி சீராக இயங்கச் செய்கிறது.
தோல், பல்லீறுகள், பற்கள், எலும்புகள் போன்றவற்றிற்கு உறுதியளிக்கிறது.
உடம்பில் உண்டான காயங்களை மிக விரைவில் ஆற்றுவதற்கு இந்த சத்து மிகவும் தேவைப்படுகிறது.
இந்த வைட்டமின் ‘C’ சத்து குறைந்தால் :
வைட்டமின் ‘C’ குறைவினால் ஸ்கர்வி என்ற பல் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும் நோய் உண்டாகிறது.
வைட்டமின் ‘C’ குறைவினால் சரும வறட்சி ஏற்படுகிறது. அதனால் சருமம் பளபளப்பு தன்மையை இழக்கிறது. மேலும் சருமத்தில காயம் ஏதும் உண்டானால் அவை எளிதில் ஆறாத தண்மையை உண்டாக்குகிறது.
வைட்டமின் ‘C’ குறைவால் ஒவ்வாமை, இரத்தச் சோகை உண்டாகும்.
இந்த உயிர்ச்சத்து குறைவதால் தசைகள் பலவீனமடைகின்றன.
 பற்கள் வலிமையற்று பல்லீறுகளில் இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் வாயில் துர்நாற்றம்உண்டாகும்.
பசியை குறைத்து, சீரண உறுப்புகளின் செய்லபாட்டை சீர்குலைக்கிறது.
 எலும்பு மூட்டுக்கள், முக்கியமாக கால் எலும்பு மூட்டுகளில் உள்ள நீரினை பசை போல் ஆக்கி மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
முகம் மற்றும் சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், கரும்படலம் முதலியவை வைட்டமின் ‘சி’ குறைவால் அதிகமாகிறது.
வைட்டமின் ‘C’ யினால் உண்டாகும் நன்மைகள் :
 வைட்டமின் ‘C’ சத்து அதிகமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அளவு வைட்டமின் ‘C’உட்கொண்டால் உடலில் வளர்ச்சி சீராக இருக்கும்.
 மனிதர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் சளிகாய்ச்சல், போன்றவை அடிக்கடி ஏற்படாமல் தடுக்க வைட்டமின்‘C’ உயிர்ச்சத்து பயன்படுகிறது. அதிகளவில் இந்த உயிர்ச்சத்து சேரும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இரும்புச் சத்தை உடலில் அதிகளவில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘C’முக்கிய பங்காற்றுகிறது. உணவில் உள்ள இரும்பு சத்தானது உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின்  ‘C’ன் ஈர்ப்புதான் காரணமாகிறது.
சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர் தாரை போன்றவற்றில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சிறுநீரின் வழியே வைட்டமி‘C’ன் வெளியேறும் போது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களையும் சேர்த்துக்கொண்டு வெளியேற்றுகிறது.
சிகரெட் பிடிப்பதினால் பல்லீறுகள் மற்றும் நுரையீரல் பைகளில் உண்டாகும் புண்களை ஆற்ற இந்த உயிர்ச்சத்து அவசியமாகிறது.
வயிறு மற்றும் குடல் புண்களில் உண்டான இரத்தக் கசிவை போக்க இந்த உயிர்ச்சத்து பயன்படுகிறது.
ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும் தன்மை இந்த உயிர்ச்சத்துக்கு உண்டு என்று அறிவியல் ஆய்வு கூறுகிறது. தினமும் தேவையான அளவு வைட்டமின்‘C’  உடலுக்கு கிடைத்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு அறவே நீங்கும்.
புற்று நோயை தடுக்கும் குணம் வைட்டமின்‘C’  -க்கு உண்டு என்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். உடலில் வாய், தொண்டை, வயிறு, நுரையீரல் போன்றவற்றில் உண்டாகும் புற்று நோயை தடுக்கும் வல்லமை இதற்குண்டு. புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வைட்டமின் ‘இ’ சத்து அதிகம் கொடுத்து நோயின் பாதிப்பு மிகாமல் தடுக்கப்படுகிறது.
மாரடைப்பு வருவதை தடுக்க வைட்டமின் ‘C’அதிக அளவில் உதவுகிறது. தினமும் உணவின் மூலம் இந்த சத்து உடலுக்குக் கிடைத்தால் மாரடைப்பு வருவது முற்றிலும் தடுக்கப்படும். இதய சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.
உலக உணவு மற்றும் ஊட்டச்சத்து கழகம் அண்மையில், உடலுக்கு தினமும் தேவையான வைட்டமின்  ‘C’ன் அளவு பற்றி அட்டவணை வெளியிட்டுள்ளது.
தாய்ப்பாலில் வைட்டமின்  ‘C’சத்து மிகுந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
நாளொன்றுக்கு ஒவ்வொரு வயதினருக்கும் தேவைப்படும் வைட்டமின் ‘C’அளவு :
0-6 மாத குழந்தைகளுக்கு - 40 மி.கி.
7-12 மாத குழந்தைக்கு - 50 மி.கி.
1-3 வருட குழந்தைக்கு - 15 மி.கி.
4-8 வருட குழந்தைக்கு - 25 மி.கி
9-13 வருட குழந்தைக்கு - 45 மி.கி.
14-18 வயது இளம் பெண்களுக்கு - 65 மி.கி.
14-18 வயது இளம் ஆண்களுக்கு - 75 மி.கி.
19 - முதுமை வரை ஆண்களுக்கு - 90 மி.கி
19-முதுமை வரை பெண்களுக்கு - 75 மி.கி.
கருவுற்ற பெண்களுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் அதிகம் தேவைப்படும். மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின‘C’சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் ‘C’ அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்
பழங்கள் :
நெல்லிக்கனி - 200 மி.கி.
மாம்பழம்        - 16 மி.கி.
பலாப்பழம்  - 7 மி.கி.
வாழைப்பழம்  - 16 மி.கி.
மாதுளம் பழம் - 16 மி.கி.
கொய்யா பழம் - 212 மி.கி.
நாவற்பழம் - 16 மி.கி.
ஆரஞ்சு பழம்- 1 மி.கி.
ஆப்பிள் - 57 மி.கி.
பப்பாளி - 63 மி.கி.
எலுமிச்சை பழம் - 63 மி.கி.
தக்காளி - 27 மி.கி.
மேலும் தர்பூசணி மற்றும் சப்போட்டா பழங்களில் கணிசமான அளவு உள்ளது.
கீரை வகைகள் :
கொத்துமல்லி - 38 மி.கி.
முள்ளங்கி கீரை - 79 மி.கி.
முளைக்கீரை  - 49 மி.கி.
பருப்புக் கீரை - 29 மி.கி.
குப்பைக் கீரை - 178 மி.கி.
மணத்தக்காளி கீரை - 11 மி.கி.             
பொன்னாங்கண்ணி கீரை - 17 மி.கி.
முருங்கை கீரை - 220மி.கி.
தண்டுக் கீரை - 99 மி.கி.
பசலைக் கீரை - 28 மி.கி.
வெந்தயக் கீரை - 52 மி.கி.
காய் வகைகள் :
முருங்கைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, கத்தரிக்காய், காளிபிளவர்
பயிறு வகைகள் :
காராமணி, பட்டாணி, உளுந்து, பச்சைப் பயறு, முளைவிட்ட மொச்சை போன்றவற்றில் அதிகம் உள்ளது.
வைட்டமின் சத்து நீரிலும், காற்றிலும் கரையக்கூடிய தன்மையுள்ளதால் நன்கு பச்சையாக உள்ள பழங்களையும், கீரைகளையும் சாப்பிடுவது நல்லது. கீரைகள் மற்றும் காய்கறிகளை பாதியளவு வேகவைத்து சாப்பிட்டால் வைட்டமின் ‘C’முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கும்.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்
மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நீர் சத்து, புரதச் சத்து போன்றவை  வெந்தயத்தில் அடங்கியுள்ளது. இது தவிர சுண்ணாம்புச்சத்து, சோடியம் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாது பொருட்களும், ரிபோபிளேவின், தயாமின், வைட்டமின் ஏ, போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.



பிரசவ வலியை குறைக்க
பிரசவ காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியினை கட்டுப்படுத்த வெந்தயம் உதவியாக உள்ளது. பெண்களின் கருப்பையை சுருக்கி, குழந்தை பிறப்பதற்கு தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் பெண்கள் கர்ப்பகாலத்தில் வெந்தயத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கருசிதைவு அல்லது குறை பிரசவம் உண்டாக வாய்ப்பு உள்ளது.

தாய்ப்பால் சுரக்க
வெந்தயத்தில் உள்ள டையோஸ்ஜெனின் என்ற வேதிப்பொருள் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தை சிறிதளவு சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் பால் அதிகமாக சுரக்கும்.
பெண்களின் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள
பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் சில உபாதைகள் ஏற்படும். இந்த உபாதைகளை குறைக்க வெந்தயம் உதவியாக உள்ளது. முதன்முதலில் மாதவிடாய் ஏற்படும் சமயத்திலும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு உடம்பில் ஏற்படும் சூட்டை தணிக்கவும், மனநிலை மாற்றத்தை சரி செய்யவும் வெந்தயத்தை சிறிதளவு வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

பெண்களின் மார்பகம் ஆரோக்கியமாக இருக்க
வெந்தயமானது பெண்களின் ஹார்மோன்களை தேவையான அளவில் சுரக்கச் செய்து, மார்பகங்கள் சரியான அளவில் ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறது.
இதய அடைப்பை தவிர்க்க
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் சத்தினால் நம் இதயத்துடிப்பும், ரத்தக் கொதிப்பும் சீராக இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது இதய அடைப்பை வரவிடாமல் தடுக்கிறது. வெந்தயத்தை சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை, இவைகள் அனைத்தையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு நீருடன் தேன் கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை நீங்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்க
நம் உடலில் உள்ள கொழுப்புப் புரதத்தை இது குறைப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் உடலின் எடையை குறைக்கலாம்.
சக்கரை நோய் கட்டுப்படுத்த
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அமினோ அமில சத்து வெந்தயத்தில் இருப்பதால், இன்சுலின் சுரப்பியை நம் உடலில் சீராக வைக்கிறது. இரவு நேரங்களில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, விடிந்ததும் தண்ணீருடன் சேர்ந்த வெந்தயத்தை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சர்க்கரை அளவு குறையும்.

செரிமானத்தைத் தூண்டும்
சில சமயங்களில் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை நீக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகத்தை சீராக வெளியேற்றுகிறது. நம் உடம்பை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. நன்றாக பசிக்கும் தன்மையை கொடுக்கும் நரம்புகளை பலப்படுத்தும்.
வயிற்று கடுப்பு
சூட்டினால் சில சமயங்களில் திடீரென்று ஏற்படும் வயிற்று வலியாக இருந்தாலும், வெந்தயத்தை வறுத்து நீர் விட்டு காய்ச்சி, சிறிதளவு தேன் கலந்து அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது வெந்தயத்தை பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். இப்படி செய்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

சீதபேதியை நிறுத்தும்
20 கிராம் அளவிற்கு வெந்தயம் எடுத்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் இடித்த வெல்லத்தை 50 கிராம் சேர்த்து பிசைந்து ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் சீதபேதி நிற்கும். சிறிது வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து நீர் மோராக குடித்தாலும் குணமாகும்.
நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும்
வெந்தயத்தில் இருக்கும் பசை தன்மையானது உங்கள் வயிற்றில் உள்புறத்தில் சூழ்ந்து கொள்வதால் எரிச்சலை உண்டாக்கும் குடல் தசைகளை சரி செய்கிறது. நம் உணவினை தாளிக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொள்வதால் நெஞ்செரிச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

காய்ச்சலைக் குறைக்க
வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவைகளை நீரில் கலந்து குடிக்க காய்ச்சல் குறையும். உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெறும். வெந்தயத்தில் உள்ள பசை தன்மையானது இருமலையும் குறைக்கிறது.
சரும அழகை பாதுகாக்க
நீரில் ஊறவைத்த வெந்தயத்தை நன்றாக அரைத்து நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள காயத்தின் மீது பயன்படுத்தலாம். தீக்காயம், கொப்பளம் பிரச்சினைகளை இது தீர்க்கிறது. நீண்ட நாட்களாக மறையாமல் இருக்கும்.

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும் நலமாகட்டும் வாழக்கை நன்றி

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

தூதுவளை பயன்கள்

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்